நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

17.10.10

அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்!


" இந்த உலகம் எனது வீடாக இருந்தால்,  அதில் பாரத  தேசம் பூஜை  அறையாக இருக்கும்" என்ற கருத்தை வேதாத்திரி மகரிஷியின் நெருங்கிய சீடரும் யோக விஞ்ஞானியுமான அழகர் ராமானுஜம் பேச சென்னையில் நடந்த ஒரு விழாவில் கேட்க நேர்ந்தது.  இதில் ஆச்சரியப்படத்தக்கது ஏதெனில்,  இவ்வாறு பேசியது ராமானுஜம் அல்ல , அமெரிக்காவில் அவர் கலந்துகொண்ட ஓர் ஆய்வரங்கில் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் சொன்னதையே அவர் வெளியிட்டார்.
.
உலகம் இன்னும் நெருக்கடியான காலக்கட்டத்தில் சவால்களை எதிர்க்கொள்ளும்  நிலையிலுள்ளது. உணவுப்பற்றாக்குறை,  வெப்பமயமாக்கல்,  இயற்கை வளங்கள் சுரண்டப்படுதல்  இவற்றிற்கெல்லாம் மேலாக உயிர்களுக்கிடையே இருக்க வேண்டிய இணக்கமான நெருக்கம் குறைந்துகொண்டே வருதல்.  ஒவ்வொரு நாடும் தனக்கேன்றே உரித்தான இயல்பான இறைத்தன்மையை இழந்து வருகிறது.
.
மாயத்தோற்றத்தில் மறைவது போல பொருளாதார, செயற்கை போராட்டத்தில் தொலைந்து நாடுகளிக்கிடையே உள்ள உறவைக் குறைக்கின்றன.
.
இதற்கு என்ன தீர்வு? 
.
அந்தந்த நாடுகளுக்குரிய உயிர்ப்பான 'தேசியம்' மட்டுமே.
.
நமது பாரதத்திற்கே உரித்தான தர்மம்,  சத்தியம், பண்பாடுகளை நாம் தொடர்ந்து பேணிக் காக்க உருவானதுதான் 'தேசிய சிந்தனைக் கழகம்'.
.
இதன் மூலம் 'தேசமே தெய்வம்'  என்ற வலைப்பூ இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
.
இதற்கான ஆதரவை நல்லோர்களிடம் நாடுகின்றோம்.
.
அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்!
அன்புடன்,
.
ம.கொ.சி. இராஜேந்திரன்
.
ஸ்ரீ விக்ருதி வருடம், புரட்டாசி மாதம்- 31 ; (17.10.2010 ).
சிறு குறிப்பு:
  • காமன்வெல்த் போட்டிகளில் இரண்டாம் இடத்தை நாம் பெற்றது வாய்ப்புகளும், வசதிகளும் இருந்தால் நம்மால் சாதிக்கமுடியும் என்பதினை பறைசாற்றுகிறது. அதே சமயம், தேசிய விளையாட்டான ஹாக்கியில் ஆஸ்திரேலியாவிடம்  8-௦0 ௦  என்ற கணக்கில் தோற்றது தேசிய விளையாட்டின் மீது நமது அரசிற்கும் அரசியல்வாதிகளுக்கும் சரியான தொலைநோக்குப் பார்வை இல்லாமல் இருப்பதை வெளிப்படுத்துகிறது.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக