நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

5.10.11

நீறின் பெருமை நிலைக்கச் செய்தவர்


ஏனாதி நாயனார்
(திருநட்சத்திரம்: புரட்டாசி - 18 - பூராடம்)


“ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்”

சோழர்களுடைய வெண்கொற்றகுடையின் கீழ் புகழ்பெற்று விளங்கிய நாடு சோனாடு. ஈழக் குல சான்றோர் மரபில், அம்மரபு செய்தத் தவத்தால், சைவ நலம் ஓங்கத் தோன்றியவர் ஏனாதிநாதர்.

திருநீற்றின் பெருமையை நன்கு உணர்ந்தவர். திருநீரு புனைந்தவர் எவராகிலும், சிவமாகப் பாவித்து வணங்குவார். வீரர்களுக்கு வாள் வீச்சுப் பயிற்சி அளிக்கும் தொழில்தலைமைப் பெற்றிருந்தார். சிறந்த வாள் வலிமையும், தோள்வலிமையும் மிக்கவர். அனைவரிடத்திலும் அன்புடனும், கருணையுடனும் பழகும் பண்பினர்.

எல்லோரிடத்திலும் கருணையுள்ளத்தோடு அவர் பழகினாலும் பொறாமையுள்ளத்துடனும், ஆணவத்தின் வடிவத்துடனும் ஏனாதியாருக்குப் பகைவனாக அதிசூரன் என்பவன் அமைந்தான். அதிசூரனும் அதே பகுதியில் வாள்பயிற்சி அளிக்கும் உரிமைப் பெற்றிருந்தான். ஏனாதியாரின் தொழில் திறமை, பண்பு நலன்களுக்கு முன்னால் அதிசூரனின் புகழ் மங்கிவிட்டிருந்தது. அதனால் ஆத்திரம் அடைந்த அவன் ஏனாதியாரைப் போருக்கு அழைத்தான்.

ஏனாதியாரும் வீர்ர்களுக்குரிய இலக்கணங்களுடன் அதிசூரனுடன் போரிட்டு வெற்றிவாகைசூடினார். ஏனாதியாரின் திறன் கண்ட அதிசூரன் மேலும் ஆத்திரமடைந்தான். எவ்வகையிலாவது ஏலாதியாரைக் கொல்லவேண்டும் என்று உறுதிபூண்டான். அதிசூரன் சூழ்ச்சியின் துணைக்கொண்டு மறுமுறை ஏனாதியாரைப் போருக்குத் தனியே அழைத்தான். அஞ்சா நெஞ்ச கொண்ட ஏனாதியார் தனியே அதிசூரனுடன் போரிட சென்றார்.

ஏனாதியார் வீரத்துடன் வாளை வீச கையை உயர்த்தினார். அதிசூரன் முகத்தை பலகைக்கொண்டு மறைத்திருந்தான். அதை விலக்கியபோது ஏலாதியர், எப்போதும் திருநீறு பூசாத அதிசூரன் முகத்தில் திருநீற்றைக்கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து போனார். தன் கை வாளையும், பலகையையும் நீக்க எண்ணினார். ஆனால் திருநீறு பூசியவர் நிராயுதபாணியைக் கொன்ற பழிக்கும்,  பாவத்துக்கும் ஆளாக நேருமே என்று கருதி அப்படியே நின்றார். பாதகன் அதிசூரன் தன் எண்ணத்தை நிறைவேற்றினான். ஏனாதியாரின் திருநீற்றின் மீதிருந்த அன்பை நன்கு உணர்ந்திருந்த சிவபெருமான் அருள்வெளியில் தோன்றி ஏனாதியாரைத் தன்னுள் ஐக்கியமாக்கிக்கொண்டார்.

“அருள்மயமானது திருநீறு. வினைகள் நீறாக்குவதனால் நீறு எனப்பட்டது. தெய்வீகமானது ஆனபடியால் திருநீறு; பேய், பில்லி சூன்யம் நோய் முதலிய கொடுமைகளினின்றும் உயிர்களைக் காப்பாற்றுவதால் காப்பு (ரஷை) எனப்படும். மேலான ஐஸ்வர்யத்தைத் தருவனால் விபூதி எனப்படும்.

மெய்ப்பொருள் நாயனாரும் ஏனாதிநாத நாயனாரும் திருநீற்றின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்கள். இருவரும் முடிவில் விபூதியின் அன்பை வழுவாமல் வென்றனர். தோல்வியுற்றனர் முத்தினாதனும், அதிசூரனும். அவர்களுடைய உடம்பை அழித்தனரேயன்றி கருத்தை அழிக்க முடியவில்லை. வெற்றியென்பது கருத்தில் அடங்கியிருக்கின்றது.

அதிசூரனும் முக்திநாதனும் நரகிடை வீழ்ந்து துன்புற்றனர். மெய்ப்பொருளும், ஏனாதிநாதரும் சிவபதமடைந்து இன்புற்றனர்.” என்று கூறுவார், தவத்திரு கிருபானந்த வாரியார்.

- ராஜேஸ்வரி ஜெயகுமார், சென்னை  

காண்க:

ஏனாதி நாயனார் (விக்கி)

பகைவனுக்கும் அருளிய பண்பாளர்

ஏனாதி நாயனார் (பெரிய புராண சொற்பொழிவு)

ஏனாதி நாயனார் (திண்ணை)

ஏனாதி நாயனார் (திருத்தொண்டர் புராணம்)

Enathinatha Nayanar (saivam.org)

The Puranam  of Enathi Nayanar

ஏனாதிநாதர் (தமிழகக் கோயில்கள்)
 
ஏனாதி நாயனார் (தினமலர்)

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக